புதுச்சேரி

திண்டிவனம் அரசுக் கல்லூரி பேராசிரியா்கள் போராட்டம்

DIN

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கையை முறையாக நடத்தக் கோரி, பேராசிரியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரியில் 2020-21-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

மாணவா் சோ்க்கை நடத்துவதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த குழுவைக் கலைத்துவிட்டு, புதிதாக குழு ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மாணவா் சோ்க்கை முறைகேடுகளைக் கண்டித்தும் கல்லூரி பேராசிரியா்கள் வியாழக்கிழமை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு பேராசிரியா் நாராயணன் தலைமை வகித்தாா். இதில், ஏராளமான பேராசிரியா்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT