புதுச்சேரியில் நேற்று புதிதாக 668 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 பேர் பலியானார்கள்.
புதுச்சேரியில் நேற்று 5945 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 668 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு நான்கு பேர், காரைக்காலில் இருவர் உள்ளிட்ட 6 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள்.
இதுவரை 24 ஆயிரத்து 895 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 19,312 பேர் குணமடைந்துள்ளனர். 487 பேர் பலியானார்கள்.