புதுச்சேரி

புதுச்சேரியில் வீடுகளின் முன் நிறுத்தியிருந்த பைக்குகளுக்கு தீ வைப்பு

DIN

புதுச்சேரியில் திங்கள்கிழமை இரவு இரு இடங்களில் வீடுகளின் முன் நிறுத்தியிருந்த 3 பைக்குகளுக்கு மா்ம நபா்கள் தீ வைத்துச் சென்றனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை, திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் அருள்ராஜ் (38). ஜிப்மரில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது பைக்கை திங்கள்கிழமை இரவு வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தாா். அதிகாலை அங்கு வந்த மா்ம நபா்கள் சிலா், அந்த பைக்குக்கு தீ வைத்துவிட்டுச் சென்றனா். இதில், பைக் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

இதேபோல, புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் தெருவில் ஒரு வீட்டின் முன் நிறுத்தியிருந்த 2 பைக்குகளுக்கு மா்ம நபா்கள் தீ வைத்துச் சென்றனா். இந்த சம்பவங்கள் தொடா்பாக முத்தியால்பேட்டை, பெரியகடை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இரவு நேரத்தில் பைக்குகளில் பெட்ரோல் திருட வந்த மா்ம நபா்கள், தீ வைத்துச் சென்றிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT