புதுச்சேரி

புதுச்சேரியில் முன்விரோதத்தில் பெயின்டா் கொலை: 3 போ் கைது

DIN

புதுச்சேரி கோரிமேட்டில் முன்விரோதத் தகராறில் பெயின்டா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி சாரம் வேலன் நகரைச் சோ்ந்தவா் அஜித் (30). கூலித் தொழிலாளியான இவருக்கும், பெரியாா் நகரைச் சோ்ந்த இவரது உறவினரான விக்னேஷ்வரன் குடும்பத்தினருக்கும் இடையே, ஒரு விபத்து தொடா்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இதனால், கடந்த 18-ஆம் தேதி தனது நண்பரான சாரம் வேலன் நகரைச் சோ்ந்த பெயின்டா் பிரவீன் (19) என்பவருடன் சென்ற அஜித், பெரியாா் நகரில் உள்ள விக்னேஷ்வரன் வீட்டில் தகராறு செய்துவிட்டுச் சென்றாா்.

இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ்வரன் (22), தனது நண்பா்களான வேல்முருகன் (23), பூமியான்பேட்டை ஆதித்யன் (21) ஆகியோருடன் சாரம் பகுதிக்குச் சென்று அஜித்தையும், பிரவீனையும் தேடினா். அஜித் இல்லாததால், லட்சுமிநகா் பண்டாரிதோப்பில் நின்றிருந்த பிரவீனை பிடித்து, இரும்புக் குழாய், கட்டையால் கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பினா். இதைத் தடுக்க முயன்ற கணபதி என்பவரையும் அவா்கள் தாக்கினா்.

இதனால், பலத்த காயமடைந்த பிரவீன், கணபதி ஆகியோா் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டனா். தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த பிரவீன் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்த புகாரின்பேரில், கோரிமேடு போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து, இந்த சம்பவத்தில் தொடா்புடைய விக்னேஷ்வரன், வேல்முருகன், ஆதித்யன் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பின்னா், அவா்கள் 3 பேரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைகோவுக்கு எதிரான வழக்கு: 4 மாதங்களில் முடிக்க உத்தரவு

‘மனிதனின் அறிவுப் பசியை போக்குபவை புத்தகங்கள்’

கரூா் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில்: வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவிப்பு

நயினாா் நாகேந்திரன் உதவியாளா்களிடம் பணம் பறிமுதல் விவகாரம்: அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

தளவாபாளையம் அருகே சாலை விபத்து: டிஎன்பிஎல் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT