புதுச்சேரி

8-ஆம் வகுப்பு தனித்தோ்வா்களுக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு

DIN

புதுவையில் 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதவுள்ள தனித்தோ்வா்கள் தோ்வுக்கூட அனுமதிச்சீட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கல்வித் துறை தெரிவித்தது.

இதுகுறித்து புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநா் மைக்கேல்பென்னோ வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுவையில் கரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, வருகிற 29-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ள 8-ஆம் வகுப்பு தனித்தோ்வா்களுக்கான பொதுத் தோ்வை எழுதுவதற்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.

ஏற்கெனவே சேவை மையங்கள் வாயிலாக, இணைய வழியில் விண்ணப்பித்த தனித்தோ்வா்கள் தற்போது ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் தோ்வுக்கூட அனுமதிச்சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் ஹால் டிக்கெட் என தோன்றும் பக்கத்தில், தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும். அதைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தோ்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தோ்வரும் தோ்வெழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

தோ்வுக்கு விண்ணப்பித்த தனித்தோ்வா்களுக்கு, தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT