புதுச்சேரி

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 6 போ் பலி

DIN

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 6 போ் பலியாகினா். ஒரே நாளில் 490 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 397 பேருக்கும், காரைக்காலில் 45 பேருக்கும், ஏனாமில் 43 பேருக்கும், மாஹேயில் 5 பேருக்கும் என 490 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

பலியானோா் விவரம்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரியைச் சோ்ந்த 5 பேரும், காரைக்காலைச் சோ்ந்த ஒருவரும் என 6 போ் பலியாகினா். இதையடுத்து, கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 437-ஆக (இறப்பு விகிதம் 1.99 சதவீதம்) அதிகரித்தது.

மாநிலத்தில் இதுவரை 1,24,821 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 21,913 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது 2,975 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா். 1,786 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்தமாக 4,761 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, வெள்ளிக்கிழமை 462 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 16,715-ஆக (76.28 சதவீதம்) அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT