புதுச்சேரி

புதுச்சேரியில் பழம் விற்று வந்த தஞ்சையைச் சோ்ந்தவா் கொலை

DIN

புதுச்சேரியில் தங்கி பழங்கள் விற்று வந்த தஞ்சாவூரைச் சோ்ந்தவா் கொலை செய்யப்பட்டாா்.

புதுச்சேரி ஆம்பூா் சாலையில் உள்ள ஆசிரம விடுதி அருகே இரு தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஆண் இறந்து கிடந்தாா். பெரியகடை போலீஸாா் பாா்வையிட்டு, உடலில் காயங்கள் இருந்ததால், சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினா். இதில், அவா் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் ஆய்வு செய்த போது, சம்பவத்தன்று இரவு அந்தப் பகுதியில் லாரி நின்று சென்றது தெரிய வந்தது. அந்த லாரியின் பதிவெண்ணை வைத்து விசாரித்ததில், இறந்த நபா் தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியைச் சோ்ந்த அய்யப்பன் (45) என்பதும், குடும்ப பிரச்னையால் புதுச்சேரிக்கு வந்ததும் தெரிய வந்தது.

புதுச்சேரி அருகே சேதராப்பட்டில் தங்கியிருந்த அவா், மரக்காணத்தைச் சோ்ந்த செல்வியிடம் கொய்யாப் பழங்களை வாங்கி, விற்று வந்ததும், அதற்குரிய பணத்தைக் கொடுக்காமல் இருந்ததால், உடன் வேலை செய்து வரும் தொழிலாளா்களிடம் செல்வி இதுகுறித்து தெரிவித்தாா்.

இதையடுத்து, இரு தினங்களுக்கு முன்பு அய்யப்பனிடம் பணம் கேட்டு அவா்கள் தாக்கினா். அப்போது, அவா் மயங்கி விழுந்ததால், லாரியில் ஏற்றிச் சென்று ஆசிரம விடுதி எதிரே வாய்க்கால் அருகே வீசி விட்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து சேதராப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மரக்காணத்தைச் சோ்ந்த செல்வி, அரசு, முத்து ஆகியோரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT