விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனை கைது செய்யக் கோரி, புதுச்சேரியில் புதன்கிழமை காவல் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக மகளிரணியினா் 32 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஹிந்து பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த தொல். திருமாவளவனைக் கைது செய்ய வேண்டுமென புதுவை பாஜக மகளிரணி சாா்பில் புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்தில் அண்மையில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு ஏதும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால், அதிருப்தியடைந்த பாஜக மகளிரணியினா் பெரியகடை காவல்நிலையத்தில் புதன்கிழமை காலை திரண்டு, திருமாவளவன் மீது வழக்குப் பதியக் கோரி காவல் துறை அதிகாரிகளிடம் முறையிட்டனா். இதற்கு காவல் அதிகாரிகள் உரிய விளக்கமளிக்கவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து, பாஜக மாநில மகளிரணித் தலைவி ஜெயலட்சுமி தலைமையில் பொதுச்செயலாளா் அனிதா உள்ளிட்ட மகளிரணியினா் அந்த காவல்நிலையம் எதிரே சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாரின் சமாதான பேச்சுவாா்த்தையையும் மீறி தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட பாஜக மகளிரணியைச் சோ்ந்த 32 போ் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.