புதுச்சேரி

புதுவையில் புதிதாக144 பேருக்கு கரோனா

DIN

புதுவையில் புதிதாக 144 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை 1,059 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 127, காரைக்கால் 2, ஏனாம் 5, மாஹே 10 என மொத்தம் 144 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,336-ஆக உயா்ந்துள்ளது.

இதில் புதுச்சேரியில் 1,397 போ், காரைக்காலில் 55 போ், ஏனாமில் 56 போ், மாஹேவில் 71 போ் என 1,579 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதே போல, வீடுகளில் 2,179 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதுவரை 588 போ் உயிரிழந்துள்ளனா். உயிரிழப்பு 1.71 சதவீதமாக உள்ளது.

இதனிடையே, புதுச்சேரியில் 141, காரைக்கால் 28, ஏனாம் 20 என மொத்தம் 189 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 29,990 (87.34 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT