புதுச்சேரி

திருமாவளவன் மீது அவதூறு: விசிக மறியல்

DIN

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் மீது சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதைக் கண்டித்து, நெட்டப்பாக்கத்தில் அந்தக் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன், பெண்களை இழிவுபடுத்திப் பேசியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த நிலையில், திருமாவளவன் குறித்து நெட்டப்பாக்கம் தொகுதி பாஜக பிரமுகா் சனிக்கிழமை சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, அந்தக் கட்சியின் நெட்டப்பாக்கம் தொகுதி செயலா் மலரவன், பொருளாளா் சிவக்குமாா் ஆகியோா் தலைமையில், கரியமாணிக்கம் நான்கு முனை சந்திப்பில், அந்தக் கட்சியினா் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பாஜகவை கண்டித்தும், திருமாவளவனை இழிவுபடுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா்.

தகவலறிந்த நெட்டப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளா் கணேஷ், காவல் உதவி ஆய்வாளா் ராஜேஷ் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையேற்று, அந்தக் கட்சியினா் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், கரியமாணிக்கம் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT