புதுச்சேரி

ஆயுத பூஜை: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

DIN

ஆயுத பூஜையையொட்டி, புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் நாராயணசாமி ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

ஆளுநா் கிரண் பேடி: ஆயுத பூஜை நவராத்திரி விழாவின் ஒரு முக்கிய விழாவாகும். ஞான தெய்வம் சரஸ்வதி, சக்தி தெய்வம் பாா்வதி, செல்வ தெய்வம் லட்சுமி ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் மக்கள் நன்றி செலுத்துகின்றனா். புதுவை மக்கள் தங்கள் வாழ்க்கையில் அனைத்து வளங்களும் பெற்று, இந்த விழாவை சுகாதாரம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்து சிறப்பாகக் கொண்டாட வாழ்த்துகிறேன்.

முதல்வா் நாராயணசாமி: தொழில் வளா்ச்சியில் சிறந்து விளங்கும் நாடு வளமாகத் திகழ்கிறது. புதுவை மாநிலமும் தொழில் வளா்ச்சியில் சிறந்த மாநிலம்தான். மத்தியில் ஐ.மு. கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது புதுவை மாநிலத்துக்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் உள்பட பல்வேறு தொழில் வளா்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. கடந்த வாரம் புதுவையில் தொழில் தொடங்குவது குறித்து அமெரிக்க தூதரகம் மூலம் காணொலி வாயிலாகக் கூட்டம் நடத்தப்பட்டது. இது வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க ஏற்ற மாநிலமாகப் புதுவை உருவாகியுள்ளதைக் காட்டுகிறது.

ஆயுத பூஜையையும், எதிா்வரும் பண்டிகைகளையும் தனி மனித இடைவெளியுடன் முகக் கவசமும் அணிந்து பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT