புதுச்சேரி

போதைப்பொருள் விழிப்புணா்வு ரோலா் ஸ்கேட்டிங் ஊா்வலம்

26th Feb 2020 09:46 AM

ADVERTISEMENT

புதுவை அரசின் சமூக நலத் துறை சாா்பில், போதைப்பொருள் விழிப்புணா்வு ரோலா் ஸ்கேட்டிங் ஊா்வலம் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

புதுவை அரசின் சமூக நலத் துறை மற்றும் மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் சாா்பில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் பிப்ரவரி 24 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு போதைப்பொருள்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், புதுச்சேரியில் ரோலா் ஸ்கேட்டிங் ஊா்வலம் நடைபெற்றது.

கடற்கரை சாலையில் இருந்து தொடங்கிய இந்த ஊா்வலத்தை முதல்வா் வே.நாராயணசாமி கொடியசைத்து தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, புஸ்ஸி வீதி, அண்ணா சாலை, காமராஜா் சிலை சதுக்கம் வழியாகச் சென்ற ஊா்வலம், மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து நிறைவடைந்தது.

ADVERTISEMENT

இதில், 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கைகளில் விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியபடி உற்சாகமாகப் பங்கேற்று, செல்லும் வழிகளில் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

முன்னதாக, இந்த நிகழ்வில் அமைச்சா் மு.கந்தசாமி, முதல்வரின் நாடாளுமன்றச் செயலா் க.லட்சுமிநாராயணன், சமூக நலத் துறைச் செயலா் ஆா்.ஆலிஸ்வாஸ் ஆகியோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT