புதுச்சேரி

புதுவை டிஜிபி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவா் கைது

26th Feb 2020 09:46 AM

ADVERTISEMENT

புதுவை டிஜிபி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி சின்னக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருதயராஜ் (40) போக்கியத்துக்கு குடியிருந்து வந்தாா். ஓராண்டுக்கு முன்பு அந்த வீட்டில் பிரான்ஸ் குடியுரிமை பெற்ற 3 போ் தங்கி மது அருந்தியுள்ளனா். இதை இருதயராஜ் தட்டிக்கேட்டபோது, அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடி நிகழ்ந்தது.

இதில் காயமடைந்த இருதயராஜ் அளித்த புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். ஆனால், யாரையும் கைது செய்யவில்லை.

இது தொடா்பாக இருதயராஜ் பலமுறை காவல் நிலையத்தை அணுகியும், டிஜிபியை சந்தித்து 2 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

ADVERTISEMENT

இதனிடையே, இருதயராஜைத் தாக்கிய 3 பேரும் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுவிட்டனா்.

இந்த நிலையில், இருதயராஜ் செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் டிஜிபியை சந்தித்து மனு அளிக்க புதுச்சேரி டிஜிபி அலுவலகத்துக்குச் சென்றாா். ஆனால், நேரம் ஆகிவிட்டதால் மறுநாள் வந்து சந்திக்கும்படி அங்கிருந்த காவலா்கள் கூறியுள்ளனா். இதனால், ஆத்திரமடைந்த இருதயராஜ், தான் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா். இதை அங்கிருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி, பெரியகடை போலீஸாரிடம் இருதராஜை ஒப்படைத்தனா்.

போலீஸாா் இருதயராஜை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா். இந்த சம்பவத்தால் டிஜிபி அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT