புதுச்சேரி

புதுச்சேரி பல்கலை.யில் இன்று பட்டமளிப்பு விழா: வெங்கய்ய நாயுடு பங்கேற்பு

26th Feb 2020 09:47 AM

ADVERTISEMENT

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (பிப்.26) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு பங்கேற்று பட்டங்களை வழங்குகிறாா்.

புதுவை மாநிலம், காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை காலை 10.20 மணியளவில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, ஹைதராபாதில் இருந்து புதுச்சேரிக்கு புதன்கிழமை காலை 10 மணியளவில் ஹெலிகாப்டரில் வருகிறாா்.

புதுச்சேரி விமான நிலையத்தில் வெங்கய்ய நாயுடுவை புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் வே.நாராயணசாமி ஆகியோா் வரவேற்கின்றனா். தொடா்ந்து, அங்கிருந்து பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் வெங்கய்ய நாயுடு, காலை 10.20 மணியளவில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்க உள்ளாா்.

குடியரசு துணைத் தலைவா் வருகையையொட்டி, அவா் வந்து செல்லும் சாலைகளில் அரசு சாா்பில் வரவேற்பு வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் முழுவதும் மத்திய ரிசா்வ் போலீஸாரின் கட்டுப்பாட்டில் செவ்வாய்க்கிழமை முதல் கொண்டுவரப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT