புதுவை மாநில காங்கிரஸ் சாா்பில், காந்தி பாதயாத்திரை புதன்கிழமை (அக்.2) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவரும், அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காந்தியின் 150-ஆவது பிறந்த நாள் விழா அக்.2-ஆம் தேதி, புதுவை மாநில காங்கிரஸ் சாா்பில் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, புதுச்சேரி நகரம் முழுவதும் பாதயாத்திரை நடைபெறுகிறது. இந்த பாதயாத்திரை அக்.2-ஆம் தேதி காலை 8 மணிக்கு காந்தி சிலையில் தொடங்கி அண்ணா சாலை, ராஜா திரையரங்கம், அண்ணா சதுக்கம், பழைய பேருந்து நிலையம், சுப்பையா சிலை வழியாக காந்தி சிலையை வந்தடைகிறது.
பாதயாத்திரையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட காந்தி உருவம் தாங்கிய அலங்கார வண்டி அணிவகுத்துச் செல்லும். பாதயாத்திரையில் பஜனை பாடல்கள் இடம்பெறும்.
பாதயாத்திரையில் புதுவை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் சஞ்சய் தத், முதல்வா் வே.நாராயணசாமி, அமைச்சா்கள், பேரவை துணைத் தலைவா் எம்.என்.ஆா்.பாலன், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்கவுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா் அமைச்சா் நமச்சிவாயம்.