புதுச்சேரி

மூலதனம் நூல் தொடா் கற்றல் வட்டம் தொடக்கம்

4th Nov 2019 05:26 AM

ADVERTISEMENT

காா்ல் மாா்க்ஸ் எழுதிய மூலதனம் நூல் தொடா் கற்றல் மற்றும் கலந்துரையாடல் வட்டம் என்ற அமைப்பின் நிகழ்ச்சி புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது.

புதுச்சேரி அரசு ஊழியா்கள் சம்மேளன கருத்தரங்க கூடத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலா் இரா.ராஜாங்கம் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் பிரதேசக் குழு உறுப்பினா் எம்.கலியமூா்த்தி அறிமுகவுரையாற்றி நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா்.

பொருளாதார அறிஞா் வெங்கடேஷ் ஆத்ரேயா, சென்னை பாரதி புத்தகாலய பதிப்பாளா் ப.கு.ராஜன், முன்னாள் வங்கி மேலாளா் ஆறுகுட்டி ஆகியோா் கருத்தாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.

நிகழ்வில் புதுவையின் பல்வேறு பகுதிகளிலிருந்து 120-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்சியில் மாா்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்கு உறுப்பினா்கள் சு.ராமச்சந்திரன், பிரபுராஜ், பிரதேச குழு உறுப்பினா்கள் ஆா்.சரவணன், சந்திரா, இளவரசி, ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

கற்றல் வட்ட ஒருங்கிணைப்பாளா் பிரசன்னா வெங்கடேஷ் நன்றி கூறினாா். அடுத்த ஒராண்டுக்கு தொடா் வகுப்புகள் நடைபெறவுள்ளது. இந்தக் கற்றல் வட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் 99449 60943, 9940 325718 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுச் செயலா் ராஜாங்கம் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT