புனித ஜெயராக்கினி அன்னை ஆலய பெருவிழா

புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த ஆலயத்தில் நிகழ் ஆண்டுக்கான ஆலய பெருவிழா வெள்ளிக்கிழமை காலை திருப்பலி முடிந்து கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதுச்சேரி - கடலூர் மறை மாவட்ட முதன்மை குரு அருளானந்தம் கொடியேற்றினார். இந்த விழா வருகிற 
12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாள்களில் தினமும் திருப்பலி, மறையுரை, சிறிய தேர்பவனி, திவ்ய நற்கருனை ஆகியவை நடைபெறும். 
விழாவின் முக்கிய நிகழ்வாக அலங்காரத் தேர்பவனி மே 12-ஆம் தேதி மாலை நடைபெறும். முன்னதாக, அன்று காலை 5 மணிக்கு வேலூர் மறைமாவட்ட ஆயர் செளந்தரராஜு தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத் தந்தை ஆரோக்கியநாதன் உள்ளிட்ட விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com