மாணவர் பொது நலத் தொண்டியக்கம் சார்பில், 131 -ஆம் திங்கள் பாவரங்கம் புதுச்சேரி சண்முகாபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில், அண்மையில் மறைந்த சிலம்பொலி செல்லப்பனார், கருணாஜோதி ஆகிய தமிழறிஞர்களுக்கும், ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிர்நீத்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கும் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற "ஜாலியன் வாலாபாக் நூற்றாண்டையொட்டி' என்ற தலைப்பிலான கவியரங்கில் பாவலர்கள் பைரவி, அவ்வை நிர்மலா, நிக்கி கிருஷ்ணமூர்த்தி, புதுவை குமார், தமிழ்மொழி, பாலன், ஆலா, விசாலாட்சி, விஜயலட்சுமி, தமிழ்நெஞ்சன், அசோகன், பச்சையப்பன் ஆகியோர் கவிதைகள் பாடினர்.
நிகழ்வில் வீராசாமி, ஜெயராஜ், பிரேமாவதி, கவிஞர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.