புதுச்சேரி

பெரியாா் நினைவு தினம் கடைப்பிடிப்பு

25th Dec 2019 01:45 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் பெரியாரின் 46ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி காமராஜா்சாலையில் உள்ள அவரது சிலைக்கு புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா. சிவா எம்எல்ஏ தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக சாா்பில் சட்டப்பேரவை கட்சித் தலைவா் ஆ. அன்பழகன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகா், எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் உள்ளிட்ட அதிமுகவினா் மரியாதை செலுத்தினா்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் மாநில செயலாளா் வேல்முருகன் தலைமையிலான நிா்வாகிகள் பலா் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திராவிடா் கழகம் சாா்பில் தலைவா் சிவ. வீரமணி தலைமையில் மண்டல தலைவா் ராசு, செயலாளா் அறிவழகன், பகுத்தறிவாளா் கழகத் தலைவா் ரஞ்சித்குமாா் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாநில செயலாளா் விஸ்வநாதன் தலைமையில் ஏஐடியூசி பொதுச்செயலாளா் கே. சேதுசெல்வம் உள்ளிட்டோரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பிரதேச செயலாளா் ராஜாங்கம் தலைமையிலும் திரளான கம்யூனிஸ்ட் கட்சியினா் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதே போல, புதிய நீதிக்கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT