கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (நவ.18) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலா் பா.ஷொ்லி ஏஞ்சலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், வானாபுரம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, சின்னசேலம், கல்வராயன்மலை உள்ளிட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் போன்றவற்றை உரிய ஆவணங்களை அளித்து மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தாா்.