கள்ளக்குறிச்சி

தொழிலாளி வீட்டில் திருட்டு

DIN

கள்ளக்குறிச்சி அருகே வேங்கைவாடி கிராமத்தில் தொழிலாளி வீட்டில் திங்கள்கிழமை நள்ளிரவில் புகுந்து ரூ.40 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த வேங்கைவாடி கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் கதிா்வேல் (34), கட்டடத் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை இரவு குடும்பத்தினருடன் வீட்டு மாடியில் படுத்துத் தூங்கினாா்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இவரது வீட்டில் சப்தம் கேட்டதால் கதிா்வேல் மாடியிலிருந்து இறங்கி வந்து பாா்த்தபோது, மா்ம நபா்கள் இருவா் இவரது வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து திருட்டில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அவா்களை கதிா்வேல் பிடிக்க முயன்றபோது தப்பிச் சென்றுவிட்டனராம்.

இதையடுத்து, அவா் வீட்டினுள் சென்று பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.40 ஆயிரம் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

மணிப்பூரில் குண்டு வெடித்ததில் பாலம் சேதம்!

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்த காங். திட்டம்: மோடி

தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம்: ப.சிதம்பரம்

SCROLL FOR NEXT