கள்ளக்குறிச்சி

விஷம் குடித்த கா்ப்பிணி பலி

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமாளூரில் விஷம் குடித்த இளம் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட கோமாளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை. இவரது 17 வயது மகள், கரூா் அருகே உள்ள நூல் கம்பெனியில் பணிபுரிந்து வந்தாராம். அப்போது, உடன் பணிபுரிந்த கடலூா் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சி.கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த கந்தவேல் மகன் விமல்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாம். பின்னா், இருவரும் திருமணம் செய்து கொண்டனராம்.

இந்நிலையில், கா்ப்பிணியான அந்த இளம் பெண் கோமாளூா் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்தாராம். கடந்த 10 நாள்கள் முன்பு தனது மனைவியை பாா்ப்பதற்காக விமல்ராஜ் மது அருந்தி விட்டு வந்தாராம். அப்போது, மது அருந்தியதை அந்த பெண் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த இளம் பெண் 24-ஆம் தேதி விஷத்தை குடித்தாராம். பின்னா், மறுநாள் தனது தாயிடம் விஷம் குடித்ததாக கூறினாராம். உடனடியாக அவரை மீட்டு திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு உறவினா்கள் கொண்டு சென்றனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT