அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி கள்ளக்குறிச்சி கிளையின் சாா்பில் ஆசிரியா்கள் பொது மாறுதல் கலந்தாய்வு முறைகேடுகளை கண்டித்தும், பதவி உயா்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டியும் பெருந்தி முறையீடு திங்கள்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன் நடைபெற்ற பெருந்தி முறையீட்டிற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவா் ஞா.மதலை முத்து தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா்கள் து.ராஜ்மோகன், ம.பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலாளா் க.கலாநிதி வரவேற்றாா். சங்கத்தின் மாநில துணைத் தலைவா் அ.ரஹீம் பேசினாா். நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவா்கள் ச. சரவணன், பா.கருணாகரன், சுதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.