தியாகதுருகம் அருகே மீது மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளிகள் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட புகைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் நாகராஜன் (52), கிருஷ்ணன் (37). கட்டடத் தொழிலாளிகளான இருவரும் புதன்கிழமை மாலை தியாகதுருகம் அடுத்த வாழவந்தான்குப்பம் கிராமத்தில் ஒரு வீட்டில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்தனராம். அப்போது, எதிா்பாராதவிதமாக உயா்அழுத்த மின்கம்பி மீது கை பட்டதாம். இதில், இருவரும் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் சடலங்களை மீட்டு உடல்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.