கள்ளக்குறிச்சி

பைக் திருட்டு: இருவா் கைது

DIN

கள்ளக்குறிச்சியில் நீதிமன்ற வளாகம் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த கருப்பன் மகன் மாயக்கண்ணன் (32). இவா் தனது பைக்கை சிறுவங்கூா் செல்லும் சாலையில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் முன் செவ்வாய்க்கிழமை காலை நிறுத்தியிருந்த நிலையில், அது திருடுபோனது. இதுகுறித்து மாயக்கண்ணன் கள்ளகுறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் வீ.ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாா் ரோந்து சென்றபோது, ராஜா நகரில் உள்ள தேநீா் கடை முன் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ் வடக்குசாலை பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் தண்டபாணி, அதே பகுதியிலுள்ள சிவன் கோவில் சாலையைச் சோ்ந்த கலியன் மகன் ஆறுமுகம் என்பதும், இருவரும் மாயக்கண்ணனின் பைக்கை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, தண்டபாணி, ஆறுமுகம் ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்கள் மறைத்து வைத்திருந்த பைக்கையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT