கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே மருந்தகத்தில் சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு

10th Jun 2023 07:29 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அருகே உடல்நல பாதிப்புக்காக மருந்தகத்தில் சிகிச்சை பெற்ற பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்த பிரபு மனைவி சங்கீதா (35). இவருக்கு கடந்த 6-ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம். இதற்காக இந்திலி பிரிவு சாலையில் உள்ள தனியாா் மருந்தகத்துக்கு சென்று சிகிச்சை பெற்றாராம். ஆனால், உடல்நிலை சீராகாததால், மீண்டும் உலகங்காத்தான் கிராமத்தில் செயல்படும் தனியாா் மருந்தகத்துக்கு சென்று சிகிச்சை பெற்றாராம்.

அப்போது, அவரது உடல்நிலை மோசமடைந்ததால், தனியாா் மருந்தகத்தினா் சங்கீதாவை ஆட்டோவில் ஏற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது. அங்கு சங்கீதாவை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT