கள்ளக்குறிச்சி அருகே புதிய நியாயவிலைக் கடை கட்டடம் கட்ட எம்எல்ஏ மா.செந்தில்குமாா் அடிக்கல் நாட்டினாா்.
குடியநல்லூா் கிராமத்தில் ரூ.11 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கட்டடம் கட்டுமானப் பணியை கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ மா.செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில் ஒன்றிய அதிமுக செயலாளா்கள் வெ.அய்யப்பா, அ.கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.