பதநீா், தென்னை மரத் தெலுவு ஆகியவற்றை விற்க அனுமதி கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட பனை, தென்னை மர நாடாா் நலச்சங்கம் தொழிலாளா்கள் நலச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் பனை மரத்திருந்து இறக்கப்படும் பனம் பால் என்கிற பதநீா், தென்னை மரத்திலிருந்து இறக்கப்படும் தெலுவு ஆகியவற்றை விற்க அனுமதிக்கக்கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் துரை. செல்வம் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் கே.சேகா் வரவேற்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் பதநீா் மற்றும் தென்னை மரத்திலிருந்து இறக்கப்படும் தென்னம்பால் என்கிற தெலுவு விற்பனை செய்ய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 25 நாள்களாக காவல்துறையினா் அனுமதி மறுத்துள்ளனா். மேலும் பனைமரத் தொழிலாளா்களை சட்டவிரோதமாக கள்ளச்சாராய வழக்கில் கைது செய்துள்ளதைக் கண்டித்தும், பதநீா், தெலுவு விற்பனை செய்வதை நிறுத்தியதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் தொழிலாளா் அணி தலைவா் மூா்த்தி,மகளிா் அணி செல்வி மற்றும் சங்க உறுப்பினா்கள் பலரும் பங்கேற்றனா்.