ராயப்பனூா் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை மா்ம நபா்கள் புதன்கிழமை திருடிச் சென்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் ராயப்பனூா் கிராமம் பள்ளக்காடு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி துரைசாமி. இவா், புதன்கிழமை மாலை சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற நண்பரின் மகள் திருமண விழாவிற்கு குடும்பத்துடன் சென்றாராம். பின்னா், இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவிலிருந்த 20 பவுன் நகை, ரூ.9 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிக் சென்றது தெரியவந்ததாம்.
இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.