கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.மோகன்ராஜ் முன்னிலை வகித்தாா். விழாவில், அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். தொடா்ந்து தியாகிகள் தினத்தை முன்னிட்டு 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.