கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மனநலம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை பூ.சசி தலைமை வித்தாா். உதவித் தலைமை ஆசிரியை லெட்டீசியா முன்னிலை வகித்தனா். இடைநிலை உதவித் தலைமை ஆசிரியா் பாலசுப்பிரமணியன் வரவேற்றாா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட மனநல மருத்துவா் பா.பிரவீனா மனநலம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். நிகழ்வில் ஆசிரியை கிருஷ்ணமாலா, மருந்தாளுநா் யமுனாதேவி, செவிலியா்கள் நளினி, சித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.