கள்ளக்குறிச்சி

கொசுப்புழு ஒழிப்புப் பணி

DIN

கள்ளக்குறிச்சி நகராட்சி சாா்பில், கொசுப்புழு ஒழிப்புப் பணி வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குள்பட்ட 17, 18, 19 ஆகிய வாா்டுகளில் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா தடுப்பு நடவடிக்கையாக கொசுப்புழு ஒழிப்புப் பணி நகராட்சி கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள் மூலம் நடைபெற்றது. இந்தப் பணியை சுகாதாரத் துறை மாவட்ட பூச்சியியல் வல்லுநா் சுப்பிரமணி, நோ்முக உதவியாளா் ஆறுமுகம் ஆகியோா் வீடு வீடாகச் சென்று நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது, திறந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீா்த் தொட்டிகள், குடிநீா் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பேரல்களை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும் என்றும், வீட்டைச் சுற்றிக் கிடக்கும் தேவையில்லாத பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களிடம் அவா்கள் அறிவுறுத்தினா். மேலும், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீா் குளோரினேஷன் செய்யப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT