கள்ளக்குறிச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஏ.கே.டி பள்ளி முன்பிருந்து டிராக்டா், மோட்டாா் சைக்கிள்கள் பேரணி தொடங்கி, மந்தைவெளித் திடலில் முடிவடைந்தது.
பேரணிக்கு முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.வீ.ஸ்டாலின்மணி தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் டி.ஏழுமலை, மாவட்டப் பொருளாளா் எம்.சி.ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவா்கள் ஏ.அய்யனாா், வி.நாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.