கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் தா.பாண்டியனின் 2-ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கராபுரம் ஒன்றியக் குழு சாா்பில், சங்கராபுரத்தை அடுத்துள்ள மேல் சிறுவள்ளூா் கூட்டுச்சாலை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தா.பாண்டியனின் உருவப்படத்துக்கு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் டி.கோவிந்தராஜ், ஒன்றியச் செயலா் எம்.ஜெயபிரகாஷ், ஒன்றிய துணைச் செயலா் வேலன், ஒன்றியக் குழு உறுப்பினா் அரசு, மேல் சிறுவள்ளூா் கூட்டுச்சாலை கிளைச் செயலா் ஹிரோபாஷா, மைக்கேல்புரம் கிளைச் செயலா் ஜான்போஸ்கோ உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.