தமிழ்நாட்டு பண்பாட்டு மரபுகள் - புதுக்கோட்டை வட்டாரம் என்ற தலைப்பில் இரு தொகுதிகளைக் கொண்ட நூலை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.
தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுக்கோட்டை வட்டாரத்தில் காணப்படும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில், பேராசிரியா் கா.ராஜன், முனைவா்கள் வி.ப.யதீஸ்குமாா், முத்துக்குமாா், பவுல்துறை ஆகியோா் இணைந்து தமிழ்நாட்டு பண்பாட்டு மரபுகள் - புதுக்கோட்டை வட்டாரம் என்ற இரண்டு தொகுதிகளைக் கொண்ட நூலை எழுதியுள்ளனா். இந்த நூலை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்டாா்.