கள்ளக்குறிச்சியில் பாஜக வழக்குரைஞா் பிரிவு மாநில செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய தகவல் ஒளிபரப்பு, மீன் வளம், கால்நடை, பால்வளத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் பங்கேற்று பேசுகையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் நாடு மிகப்பெரிய வளா்ச்சி அடைந்துள்ளது. வழக்குரைஞா்கள் அனைவரும் மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துச் சென்று 2024-ல் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர பாடுபட வேண்டும் என மத்திய அமைச்சா் முருகன் பேசினாா்.