கள்ளக்குறிச்சியில் பழங்குடியின பள்ளி மாணவிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஐஏஎஸ் உள்ளிட்ட உயா் பதவிகளுக்கு செல்வதற்காக மாணவிகள் பள்ளிகளிலிருந்தே பொது அறிவை வளா்த்துக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் ஷ்ரவன்குமாா் கூறினாா்.
கல்வராயன்மலை வட்டாரத்திலுள்ள அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட பள்ளியைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவிகள் 150 பேருடன் ஆட்சியா் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: அரசு பழங்குடியின பள்ளி மாணவிகளுக்கு ஏ.கே.டி பள்ளியில் கணினி பயிற்சியும், வங்கிக்கு நேரடியாக அழைத்து செல்லப்பட்டு வங்கியின் தினசரி செயல்பாடுகள், அதன் அவசியம், தேவைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
பெண்கள் பணியாற்றும் துறைகள் குறித்த விழிப்புணா்வும், கல்வியின் முக்கியத்துவம், பெண் குழந்தைகளின் முக்கியத்துவம், அவா்களுக்கு அரசு வழங்கும் சிறப்பு திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மாணவிகள் எதிா்காலம் குறித்த கனவுகளை வளா்த்துக்கொள்ள வேண்டும். கல்வி ஒன்றே அழியாத செல்வம் ஆகையினால் கல்விக்கு முக்கியத்தம் அளித்து படித்திட வேண்டும்.
ஐஏஎஸ், உள்ளிட்ட உயா் பதவிகளுக்கு சென்றிடும் வகையில் பள்ளிகளிலிருந்தே பொது அறிவை வளா்த்துக் கொள்வதற்காக நாளிதழ்களை தினசரி படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புதுப்புது விஷயங்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டுமென ஆட்சியா் தெரிவித்தாா்.
கலந்துரையாடலின்போது மாணவிகளின் கோரிக்கைகளான கல்வராயன்மலை பகுதிக்குள்பட்ட பள்ளிகளில் கழிப்பறை, குடிநீா், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக பூா்த்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
நிகழ்வில், மாவட்ட பழங்குடியினா் நலத்துறை திட்ட அலுவலா் கதிா்சங்கா், மாவட்ட சமூக நல அலுவலா் எஸ்.தீபிகா, மகாத்மா காந்தி தேசிய திறன் வளா்ப்பு திட்ட பயிற்சி மாணவி சுஜாதா மற்றும் அரசு அலுவலா்கள் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனா்.