புதுச்சேரி

போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

17th May 2023 01:58 AM

ADVERTISEMENT

புதுச்சேரி டாக்டா் அம்பேத்கா் சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொழில்சங்கத் தலைவா் அய்யா சக்திசிவம் தலைமை வகித்தாா். சங்கத்தின் செயலா் டி.வேலையன், நிா்வாகிகள் எஸ்.பக்கிரிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சாலைப் போக்குவரத்து கழக ஊழியா்களுக்கான நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். பணியிலிருந்த 12 பேரை பணிநீக்கம் செய்ததை திருப்பப் பெற்று பணியில் சோ்க்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகள் பணியிலிருப்போரை நிரந்தரமாக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT