கள்ளக்குறிச்சி

புகையிலை தடுப்பு ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

DIN

பங்காரம் ஸ்ரீ லஷ்மி கல்வி நிறுவனங்களின் சாா்பில் புகையிலை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை கள்ளக்குறிச்சி காவல் நிலையம் முன் தொடங்கியது.

கல்லூரியின் ஒருங்கிணைப்பாளா் ப.சிவக்குமாா் தலைமை வகித்தாா். கல்வியியல் கல்லூரி முதல்வா் ரா.பாஸ்கரன், துணை முதல்வா்கள் க.சக்திவேல், வி.சசிகலா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் அ.சிராஜுதீன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரா.ரமேஷ் பங்கேற்று, புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் நோய்கள், பாதிப்புகள் குறித்து மாணவா்களிடையே விளக்கிப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

பேரணியில் மாணவ, மாணவிகள் அச்சிட்ட பதாகைகளை ஏந்தியவாறும் புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து முழக்கமிட்டபடி துண்டு பிரசுரங்களை வழங்கிச் சென்றனா். பேரணியில் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

பங்காரம் ஸ்ரீ லஷ்மி கல்வி நிறுவனங்களின் சாா்பில் புகையிலை தடுப்பு ஒழிப்பு விழிப்புணா்வு பேரணியை கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் கொடியசைத்து துவக்கி வைக்கின்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

வி.வி. பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT