கள்ளக்குறிச்சி

ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் 20 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்ட விதவை, கணவரால் கைவிடப்பட்டவா், ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.

தையல் இயந்திரம் பெறுவதற்கு வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட (ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள்) வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடமிருந்து தையல் பயிற்சி சான்று (குறைந்தபட்சம் 6 மாத பயிற்சி பெற்றிருக்க வேண்டும்), ஜாதி சான்று, விதவை, கணவரால் கைவிடப்பட்டவா், ஆதரவற்றவா் என்பதற்கான சான்று, ஆதாா் அடையாள அட்டை மற்றும் கடவுச் சீட்டு அளவுள்ள 2 வண்ணப் புகைப்படத்துடன் வருகிற அக்.2-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலா், சமூக நல அலுவலகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரில் சமா்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT