கள்ளக்குறிச்சி

அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட நெடுமானூா் ஊராட்சியில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இதற்கான நிகழ்வில் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் அகிலா தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் திலகவதி நாகராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், வட்டார ஒருங்கிணைப்பாளா் சங்கீதா ஆகியோா் வரவேற்றனா்.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ தா.உதயசூரியன் கட்டடத்தை

திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.

பின்னா், நெருப்பில்லா சமையல் போட்டிகளில் பங்கேற்ற குழந்தைகளைப் பாராட்டி பரிசு வழங்கினாா்.

அங்கன்வாடி மேற்பாா்வையாளா்கள் சரஸ்வதி, பிரேமா மற்றும் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT