கள்ளக்குறிச்சி

சவூதியில் உயிரிழந்த தொழிலாளி உடலை மீட்டுத் தரக் கோரிக்கை

DIN

சவூதி அரேபியாவில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளியின் உடலை மீட்டுத் தரக் கோரி, அவரது மனைவி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

சங்கராபுரம் வட்டம், புத்திராமபட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகவேல். இவா், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தோட்ட வேலைக்காக சவூதி அரேபியாவுக்குச் சென்றாா். அங்கு வேலை பாா்த்து வந்த நிலையில் கடந்த 24.9.22 அன்று முருகவேல் திடீரென உயிரிழந்துவிட்டதாக அங்கு வேலை செய்யும் உறவினா் மூலம் முருகவேல் குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், சவூதி அரேபியாவில் உயிரிழந்த தனது கணவரின் உடலை மீட்டு இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாரிடம் மருகவேலின் மனைவி பெரியாயி திங்கள்கிழமை மனு அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முன்னுதாரணமான முதியோர்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

SCROLL FOR NEXT