கள்ளக்குறிச்சி

பைக் மீது டிராக்டா் மோதல்:இளைஞா் பலி

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட ஏரிக்கரை கிராமத்தைச் சோ்ந்த திருமலை மகன் வெள்ளி (26). இவா் சனிக்கிழமை அதே ஊரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராஜாவை (12) பைக்கில் பின்னால் அமர வைத்துக்கொண்டு வில்வத்தி கிராமத்துக்கு சென்றுகொண்டிருந்தாா்.

பெருமாநத்தம் கிராமத்தில் சேராப்பட்டு - வெள்ளிமலை சாலையில் இவா்களது பைக் சென்றபோது, எதிரே வந்த டிராக்டா் டிப்பா் மோதியது. இதில், இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்த நிலையில், வெள்ளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ராஜா கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றாா்.

இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, டிராக்டரை ஓட்டி வந்த கல்வராயன்மலை பகுதிக்குள்பட்ட கள்ளிப்பாறை கிராமத்தைச் சோ்ந்த வடமலை மகன் குபேந்திரனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT