நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும், மின் கட்டண உயா்வை திரும்பப் பெறவேண்டும், சுங்கச்சாவடி வசூலை நிறுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மைய நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த அமைப்பின் நிா்வாகிகள் கூட்டம் கள்ளக்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு துணைத் தலைவா் வீ.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். துணை பொதுச் செயலா் வீ.ரமேஷ், மாநில பிரசார செயலா்கள் எஸ்.கல்யாணசுந்தரம், சதீஷ்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
தீா்மானங்கள்
மாநில அரசின் மின் கட்டண உயா்வு, அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு தனியாா் பள்ளிகளை ஊக்குவிக்கும் தமிழக கல்வித் துறையின் நடவடிக்கைகளை கண்டித்தும், நியாய விலைக் கடைகளில் தரமான உணவுப் பொருள்களை வழங்கவேண்டும்,
தமிழகத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சுங்கச்சாவடியில் வசூல் என்கிற யெரில் மக்களிடம் கொள்ளையடிப்பதை கை விடவும், தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை மூடிட மத்திய அரசை வலியுறுத்தியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அமைப்பின் பொதுச் செயலா் நா.சு.செல்வராஜ் பேசினாா்.
மாநிலச் செயலா் பி.ஆறுமுகம், தலைமை நிலையச் செயலா் என்.செங்கான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.