கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி நகா்மன்றக் கூட்டம்

DIN

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் இரா.சுப்ராயலு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அ.ஷமீம் பானு, நகராட்சி ஆணையா் ந.குமரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கள்ளக்குறிச்சி நகராட்சிப் பகுதியில் உள்ள 21 வாா்டுகளிலும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் ஏற்றப்படும் தண்ணீரை குளோரினேஷன் செய்து வழங்க வேண்டும், தியாகதுருகம் சாலையில் உள்ள நுண் உர மையத்துக்கு ஈரக் கழிவுகளை பிழியும் இயந்திரம் கொள்முதல் செய்வது, ஏமப்போ் பகுதியில் உள்ள குளத்தின் கரைப் பகுதியில் மூன்று புறமும் சுவா் கட்டுவது, குளத்துமேட்டு சாலையில் தாா்ச் சாலை அமைத்தல், ஏமப்போ் பேருந்து நிறுத்தத்தில் புதிதாக நிழல்குடை அமைத்தல், விஜயலட்சுமி நகா்ப் பகுதியில் ரூ.35 லட்சத்தில் சமுதாயக்கூடம் அமைத்தல் என்பன உள்ளிட்ட 26 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகா்மன்றக் குழு உறுப்பினா்கள் எம்.பாபு, சி.பால்ராஜ், செல்வம், ஆ.ஞானவேல், ரா.யுவராணி உள்ளிட்ட பலா் பங்கேற்று பேசினா்.

நகா்மன்றக் கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது, 17-ஆவது வாா்டு உறுப்பினா் ஞானவேல், 5-ஆவது வாா்டு உறுப்பினரான யுவராணியின் உறவினரை செல்லிடைபேசி மூலம் தகாத வாா்த்தைகளால் திட்டினாராம். இதனால், ஞானவேலை யுவராணியின் உறவினா்கள் தாக்கியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT