கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட பூட்டை, செம்பராம்பட்டு, அரசம்பட்டு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினாா்.
ஊரக வளா்ச்சித் துறை மூலம், பூட்டை ஊராட்சியல் 13-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ.33 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
மேலும், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.4.44 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
செம்பராம்பட்டு ஊராட்சியில், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தனி நபா் வீடுகள், பொது இடங்களில் உறிஞ்சு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
அரசம்பட்டு ஊராட்சியில் தொகுதி எம்எல்ஏ மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சத்தில் குழந்தைகள் நல மையம் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, சின்னசேலம் வட்டத்துக்கு உள்பட்ட வடக்கானந்தல் பகுதியில் உள்ள விதைப் பண்ணையில் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி செய்வதையும், தென்னங்கன்றுகள் நாற்றங்காலையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, இயற்கை முறையில் விவசாயப் பணிகளை மேற்கொள்ளவும், அதிகளவில் பாரம்பரிய நெல், தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்யவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.வேல்விழி, துணை இயக்குநா் செ.சுந்தரம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ஆா்.விஜயராகவன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி.ராஜேந்திரன், டி.ரவிச்சந்திரன், ஒன்றியப் பொறியாளா்கள் அருள்பிரசாந்த், ஷபான்கான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.