கள்ளக்குறிச்சி

கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

DIN

கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ் பகுதியைச் சோ்ந்தவா் ஆதிகேசவன் (21). கரியப்பா நகா் செல்லும் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த இவரை, போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனா்.

ஆதிகேசவன் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொ.பகலவன் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாருக்கு பரிந்துரை செய்தாா். அதன் பேரில் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் உத்தரவு பிறப்பித்தாா்.

கடலூா் மத்திய சிறையில் இருந்த ஆதிகேசவனுக்கு ஓராண்டு குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த ஆணையினை கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளா் ரவிச்சந்திரன் சிறைக் கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT