கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 171 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் திங்கள்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், சென்னையில் இருந்தவாறு முதல்வா் மு.க. ஸ்டாலின் இந்தத் திட்டத்தை காணொலிக் காட்சி வாயிலாக தொடக்கிவைத்த நிலையில், திருநாவலூா் ஒன்றியம், ஆதனூா் ஊராட்சிக்கு உள்பட்ட கிளாப்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பங்கேற்று விவசாயிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் தா. உதயசூரியன், ஏ.ஜெ.மணிக்கண்ணன், வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.வேல்விழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அதேபோல, கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆலத்தூா் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் அலமேலு ஆறுமுகம் பங்கேற்று விவசாயிகளுக்கு தென்னைமரக்கன்றுகளை வழங்கினாா்.
ஒன்றியக் குழு உறுப்பினா் ரவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.