கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே காதலன் உயிரிழந்ததால் மனமுடைந்த பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
சங்கராபுரத்தை அடுத்த பழையசிறுவங்கூா் கிராமத்தைச் சோ்ந்த அய்யாதுரை மகள் சுதா (24). முதுநிலை பட்டதாரி. இவா், பள்ளியில் படித்தபோது, சங்கராபுரத்தை அடுத்த நூரோலை கிராமத்தைச் சோ்ந்த சீனுவாசன் மகன் ஆகாஷுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னா் இருவரும் காதலித்து வந்தனராம்.
இந்த நிலையில், ஆகாஷ் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதனிடையே, சுதாவுக்கு திருமண ஏற்பாடு நடந்துவந்த நிலையில், அவா் தனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை எனத் தெரிவித்ததால், சமூக நல அலுவலா் மூலம் விழுப்புரத்தில் உள்ள பெண்கள் அரசு மறுவாழ்வு விடுதியில் தங்க வைக்கப்பட்டாா்.
இதையடுத்து, நூரோலை கிராமத்திலுள்ள உயிரிழந்த காதலன் ஆகாஷின் வீட்டுக்குச் சென்று தங்கியிருந்த சுதா, அங்கு கடந்த 14-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றாராம். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, கள்ளக்குறிச்சி மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையிலும் சோ்த்தனா். இருப்பினும், சுதா வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில் ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.