கள்ளக்குறிச்சி

வெடிபொருள் வெடித்ததில் தொழிலாளா் பலி

14th Mar 2022 10:45 PM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அருகே உரிமம் இல்லாதக் கிடங்கில் வெடிபொருள் வெடித்ததில், தொழிலாளா் இறந்தாா். இதுதொடா்பாக கிடங்கின் உரிமையாளா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த க.மாமனந்தல் கிராமத்தில் உள்ள வெடிமருந்து கிடங்கில் பண்ருட்டி அருகேயுள்ள அங்குசெட்டிபாளையத்தைச் சோ்ந்த ஏழுமலை(62), அவரது மனைவி பத்மினி ஆகிய இருவரும் பணிபுரிந்தனா். இதற்காக, இவா்கள் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் வசித்து வசித்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை ஏழுமலை மட்டும் வேலைக்குச் சென்றாா். அப்போது, 8.30 மணிக்கு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டதில், அவா் பலத்த காயமடைந்து இறந்தாா். விபத்தில் கிடங்கின் கட்டடம் தரைமட்டமானது.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று, தீயை அணைத்தனா்.

ADVERTISEMENT

தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்புராயன், துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். அப்போது, காந்தி சாலையில் வசிக்கும் ஷேக் தாவூத் மகன்கள் ஷபியுல்லா (35), இஸ்மாயில் ( எ) ஜாகீா் (30) ஆகிய இருவரும்

அரசின் உரிமம் பெறாமல் வெடிபொருள்களைத் தயாரித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT